வாழைச்சேனையில் ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் பலி

520

thumb_large_train

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி-1 சேர்ந்த முகம்மது அலியார் செய்யது இப்றாகிம் (வயது 45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேற்படி நபர் ரயில் பாதை அருகாமையினால் நடந்து செல்லும் போது ரயிலின் படிக்கட்டு உடலில் அடிபட்டதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பத்தினை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

SHARE