விக்கினேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வரவேற்கின்றேன் தமிழ்மக்கள் மீது பற்றுள்ளவராக கொள்கையில் மாற்றம் இல்லாதவராக செயற்படுகின்ற தலைவராக விக்கினேஸ்வரன் ஐயா திகழ்கின்றார்
உண்மையிலேயே தமிழர்களின் மீது உலகத்தின் கவனம் திரும்பிய போது அதை அற்ப ஆசைகளுக்கா உதாசினம் செய்தவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பினர் இனி ஒருபோதும் தமிழ்மக்களுக்கு எதுவித தீர்வுகளையும் அவர்களால் பெற்று தரமுடியாது என்பது வெளிப்படை
இன்று கிழக்கை முஸ்லிங்களிடம் தாரைவார்த்து கொடுத்துள்ளார்கள் இதுபோன்ற அசமந்த போக்குகளால்தான் இன்று தமிழர் பேரவை உதயமாகியுள்ளது என்னைப்பொறுத்தவரையில் இது இலங்கை பூராவும் வியாபித்து வளரவேண்டும் தமிழர்களுக்கா தயக்கமின்றி குரல்கொடுக்கவேண்டும்.
முதலாவது எமது தமிழ் சமுகம் விழிப்படையவேண்டும் நமது சமுகத்திடையே உள்ள கூடாத குணம் என்னவென்றால் யாராவது பிழைகளை தட்டிகேட்டால் உடனடியா துரோகி பட்டம் சூட்டிவிடுவார்கள் அதில் உள்ள உள்நோக்கத்தையோ, காரணத்தையோ அறியவிரும்புவதில்லை அதனால்தான் இன்று தமிழ் அரசியல்தலைவர்களிடையே ஒற்றுமையான செயற்பாடில்லை இது எங்கள் சமுகத்தின் சாபகேடாகும்.
இன்று முஸ்லிம்களை பாருங்கள் என்னதான் பிரச்சினை என்றாலும் சமுகம் என்று வருகின்ற போது ஒன்றாகிவிடுவார்கள் இது போன்ற ஒற்றுமையை நாம் ஏன் கொண்டுவர முடியாது. இன்று எங்களையும் மதிப்பளித்து விக்கினேஸ்வரன் ஐயா வரேற்றிருக்கின்றார் இதை நான் வரவேற்கின்றேன் ஏனெனில் இன்று கிழக்கு தமிழனின் நிலமை மோசமடைந்துள்ளது.
இருசமுகங்களால் நாம் நெருக்கப்படுகின்றோம் இதற்கெல்லாம் முடிவுகட்டவேண்டும்மென்றால் பேதங்களை மறந்து தமிழதாயகமெல்லாம் பேரவையின் சிறகுகள் விரியவேண்டும் இதற்கான முளு ஆதரவுகளை நாங்கள் வளங்கவோம்