விக்கியின் உண்மையான முகத்தை சம்பந்தன் வௌிப்படுத்துவாரா?

147

விரை­வில் மாகா­ண­ச­பைத் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்­ள­தால் சம்­பந்­த­னும், விக்­னேஸ்­வர­ னும் சந்­தித்­துப்­பேசி தமிழ் மக்களுக்கு நன்மை யளிக்கத் தக்க நல்­ல­தொரு முடி­வைக்­காண வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் பிரித்­தா­னி­யக் கிளை­யி­னர் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­ட­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

முத­ல­மைச்­சர் பத­விக்கு வந்­த­தில் இருந்து விக்­னேஸ்­வ­ரன் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கொள்­கை­க­ளையே கடைப்­பி­டித்து வரு­கின்­றார். அவர் பத­விக்கு வந்­த­தன் பின்­னர் இடம்­பெற்ற தேர்­தல்­கள் எதி­லும் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ர­வான பரப்­புரை­ களில் பங்கேற்காது தவிர்த்துக் கொண்­டார்.

நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் தொடர்­பு­களை அவர் பேணி வந்­துள்­ளார்.

தேர்­தல் முடி­வு­கள் வௌியா­ன­போது தமி­ழ­ர­சுக் கட்­சியை ஏள­னம் செய்­வ­தற்­கும் அவர் தவ­ற­வில்லை.

தற்­போது தாம் புதிய கட்­சி­யொன்றை உருவாக்கப் போ­வ­தா­க­வும், அது சாத்­தி­யப்­ப­டாதுவிட்­டால், கூட்­டணி அமைக்­கப் போவ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளமை கவனத்துக்கு உரியது.

முத­ல­மைச்­சர் பத­வி­யைப் பெற்ற பின்­னர் சம்­பந்­தனை மதிக்­கத்­த­வ­றிய விக்­னேஸ்­வ­ரன்

கடந்த மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் வேட்­ட­பா­ள­ராக சம்­பந்­த­னால் நிறுத்­தப்­பட்­ட­வர் இந்த விக்­னேஸ்­வ­ரன். ஆனால் பத­விக்கு வந்­த­தன் பின்­னர், சம்­பந்­தனையோ அவரது கருத்து க் களையோ மதிப்­ப­தற்­கு அவர் தவ­றி­விட்­டார்.

அமைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் கூட்­டுச் சேர்­வ­தை­யும் அவர் பெரு­வி­ருப்­ப­மா­கக் கொண்டு செயற்­ப­டு­வ­தை­யும் காண­மு­டி­கின்­றது. அவர் தம்­மை­யொரு வலிமை படைத்த சக்­தி­யாக எண்­ணிக் கொண்­டி­ருப்­ப­தால், கூட்­ட­மைப்பை ஒரு பொருட்­டாக மதிப்­ப­தில்லை.

இந்த நிலை­யில் சம்­பந்­த­னும், விக்­னேஸ்­வ­ர­னும் சந்­தித்­துப் பேச­வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடப்­பட்­டுள்­ளமை அர்த்­த­மில்­லாத ஒன்­றா­கவே தெரி­கின்­றது.

தற்­போது சம்­பந்­த­னும் விக்­னேஸ்­வ­ர­னும் சந்­தித்­துப் பேச­வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுத்­துள்ள­ வர்­கள், கடந்த காலங்­க­ளில் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அறி­வுரை கூறா­மல் இருந்­தது ஏன் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.

இந்த நிலை­யில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ரான கஜேந்­திரகுமார் அண்­மை­யில் தெரி­வித்த கருத்­தொன்று கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது.

கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமது கட்சி இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­த­தா­க­வும், மாற்­றுத் தலை­மைக்­கான அத்­தி­பா­ரம் இதன் மூல­மாக இடப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்த அவர், விக்­னேஸ்­வ­ரன் தனிக்­கட்­சி­யொன்றை அமைத்­தால், அவ­ரு­டன் கூட்­டுச்­சேர்ந்து இயங்­கு­வ­தில் தமக்­குச் சிர­ம­மெதுவும் இருக்­கா­தெ­ன­வும், தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் விக்­னேஸ்­வ­ரனை மாற்­றுத் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­வது தொடர்­பாக அவர் எதை­யும் கூற­வில்லை என்­பது கவ­னிக்­கத் தக்­கது. அத்­து­டன் விக்­னேஸ்­வர­னும் இன்­னு­மொரு தலை­மை­யின் கீழ் செயற்­ப­டு­வ­தற்கு விரும்­பு­வாரா என்­ப­தும் சந்­தே­கத்­துக்கு இட­மா­னதே.

வடக்கு மாகாண சபை­யின் கூட்­ட­மைப்­புச் சார்­பான அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தாமே என மாவை தெரி­விப்பு

கூட்­ட­மைப்­பில் சம்­பந்­த­னுக்கு அடுத்த நிலை­யில் உள்ள மாவை சேனா­தி­ராசா, அடுத்த வடக்கு முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தாமே­யென அறி­வித்­து­விட்­டார். இவ­ருக்­குப் பதி­லாக வேறொ­ரு­வரை நிய­மிப்­பது சம்­பந்­த­னுக்கு இல­கு­வான காரி­ய­மாக இருக்­கப் போவ­தில்லை.

இதே­வேளை விக்­னேஸ்­வ­ரன் கூட்ட­மைப்­புக்­ குச் சவா­லாக மாற்று அணி­யொன்றை அமைக்­கும் முயற்­சி­களை ஆரம்­பித்­து­விட்­ட­தா­க­வும், அத­னைச் சம்­பந்­தன் ஊடா­கத் தடுத்து நிறுத்­தும் முயற்­சி­க­ளில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான ரெலோ­வும், புளொட்­டும் இறங்­கி­யுள்­ள­தா­க­வும் பிந்­திய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சம்­பந்­த­னின் பேச்சை விக்­னேஸ்வரன் செவி­ம­டுப்­பாரா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அவ­ரி­டம் கூட்டமைப்பு சர­ணா­கதி அடை­வ­தைக் கூட்­ட­மைப்­பின் தொண்­டர்­கள் விரும்­பு­வார்­களா? என்­ப­தை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

கூட்­ட­மைப்பு சோத­னை­யா­ன­தொரு காலகட்­டத்­தைத் தற்­போது தாண்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது.

விக்­னேஸ்­வ­ரன் இதைச் சீர்­செய்­வ­தற்­குப் பதி­லாக மேன்­மே­லும் பிரச்­சி­னை ­களை ஏற்­ப­டுத்­து­வ­தி­லேயே தீவி­ர­மாக உள்­ளார். தாமொரு தலை­வ­ராக உரு­வாக வேண்­டு­மென்­பதே இவ­ரது நீண்­ட­நாள் அபி­லா­சை­யா­க­வும் காணப்­ப­டு­கின்­றது.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மீது கடும் அதி­ருப்தி கொண்­டுள்ள கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வா­ளர்­கள்

விக்­னேஸ்­வ­ர­னின் கடந்­த­கா­லச் செயற்­பா­டு­க­ளால் வெறுத்­துப்­போன கூட்­ட­மைப்­புத் தொண்­டர்­கள், அவர் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஒதுங்கி நிற்ப­தைத் தான் பெரி­தும் விரும்­பு­கின்­ற­னர்.

மாகா­ண­ச­பைத் தேர்­தல் இடம்­பெ­று­மா­யின், எவ­ருக்­குமே அறு­திப் பெரும்­பான்­மை­கி­டைக்­கா­தெ­ன­வும் கூறப்­ப­டு­கின்­றது. ஈபி­டி­பி­யின் தலை­வ­ரான டக்­ளஸ் தேவா­னந்­தா­வும் போட்­டி­யில் குதிக்க­ விருப்­ப­தால், பல்­மு­னைப்­போட்டி ஒன்றே வடக்­கில் இடம்­பெ­றப் போகின்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஏற்­பட்ட நிலை­யொன்று மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் இடம்­பெற்­றா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு எது­வு।­­­மில்லை.

ஆகவே கூட்­ட­மைப்­பி­னர் புதிய வியூ­கங்­களை வகுத்து வாக்­கா­ளர்­க­ளைக் கவ­ரு­வ­தற்­கான செயற்­திட்­டங்­க­ளில் இறங்க வேண்­டும்.

விக்­னேஸ்­வ­ரன் விட­ய­மும், சம்­பந்­த­னால் சாமர்த்­தி­ய­மா­கச் சமா­ளிக்­கப்­பட வேண்­டும். ஓர் இன­வா­தி­யா­கத் தெற்­கில் பார்க்­கப்­ப­டு­கின்ற அவர், இங்­குள்­ள­வர்­க­ளி­டம் தீவி­ர­மான இனப்­பற்­றா­ளா­ரா­கத் தம்­மைக் காட்­டிக் கொள்­கின்­றார்.

இவ­ரது உண்­மை­யான முகத்தை வௌிப்­ப­டுத்­து­வது சம்­பந்­த­னின் முக்­கிய பணி­யா­கும்.

SHARE