விசுவமடு குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

391

முல்லைத்தீவு மாவட்டம், விஸ்வமடுக் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாகமீட்கப்பட்டுள்ளார்

சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தஇருபத்து எட்டு வயதான தவராசா சந்திரகுமார் என புதுக்குடியிருப்பு பொலிஸ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,

இன்று பகல் வேளை தனது நண்பர்கள் ஐந்து பேருடன் விஸ்வமடுக்குளத்தில்நீராடிக்கொண்டிருந்தவரை இரண்டுமணியளவில் காணவில்லை எனத் தேடிய பொழுது நான்குமணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவுநீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி பரஞ்சோதி இளைஞனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குஉட்படுத்துமாறு பணித்ததனை அடுத்து குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் போலீசார்மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE