விசேட மேல் நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு கோத்­தாவுக்கு அழைப்­பாணை

129

இலங்கை காணி மீட்டல் மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 4.8 கோடி ரூபா (48,563929.06 ரூபா) பணத்தை நம்­பிக்கை மோசடி செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பேரை எதிர்­வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி  நிரந்­தர விஷேட மேல் நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு நேற்று அழைப்­பாணை அனுப்பப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளி­க்கிழமையன்று சட்ட மா அதி­பரால், பிர­தம நீதி­ய­ர­சரின் ஒப்­பு­த­லுடன்  நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட இரண்­டா­வது வழக்கு தொடர்பில் ஆராய்ந்தே இந்த அழைப்­பாணை அறி­வித்­தலை விசேட மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் நேற்று பிறப்­பித்­தனர்.

முன்னாள் பாது­காப்பு செயலர்  நந்­த­சேன கோத்­த­பாய ராஜ­பக் ஷ,

லியன ஆரச்­சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா,  கம­எத்தி ரால­லாகே சந்ரா உது­லா­வத்தி கம­ல­தாஸ,  சுதம்­மிக கேமிந்த ஆட்­டி­கல, சமன்­கு­மார அப்­ரஹாம் கலப்­பத்தி,  மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்­பெ­ரும ஆரச்­சி­லாகே ஸ்ரீமத்தி மல்­லிகா குமாரி சேனா­தீர ஆகிய 7 பேரை­யுமே இவ்­வாறு செப்டெம்பர் 10ஆம் திகதி விஷேட மேல் நீதி­மன்றில் ஆஜ­ராக உத்­தரவி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கான அறி­வித்தல், விசேட மேல் ­நீ­தி­மன்ற நீதி­ப­தி­க­ளான சம்பத் அபேகோன், சம்பத் விஜே­ரத்ன,  சம்பா ஜானகி ராஜ­ரத்ன  ஆகி­யோரால் பிறப்­பிக்­கப்­பட்­டது.

SHARE