விச ஊசி விவகாரம்! அமெரிக்க டாக்டர்களின் சேவை தேவையில்லை!- ராஜித

228

 

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்காக அமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை. இவ்வாறு சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்ட அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. அவர் மேலும் தொடர்கையில்,

விஷ ஊசி தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை எமது நாட்டு டாக்டர்களினாலேயே நடத்த முடியும். அதில் உண்மையுள்ளதா? இல்லையா என்பதனை பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தில் 80 சதவீதமான தமிழ் டாக்டர்கள், வைத்திய நிபுணர்கள் உள்ளனர். அவர்களுக்கு மொழியும் தெரியும் வைத்திய தகைமைகளும் உள்ளது.

எனவே, எமது டாக்டர்கள் திறமையானவர்கள். எனவே அமெரிக்க டாக்டர்களின் சேவை அவசியமில்லை.

அவ்வாறு வெளிநாட்டு டாக்டர்களின் சேவை தேவைப்படுமெனில் அவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சரியாக தருணத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும்.

அமெரிக்க டாக்டர்கள் வெளிநாட்டு டாக்டர்களின் சேவை தேவையா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அதனை தீர்மானிக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE