விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமல்

263

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த விஜயகலா மகேஸ்வரன் அந்நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றாது நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன் காரணமாகவே விமல் வீரவன்ச,  இராஜாங்க அமைச்சர் மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கம் எனக்கூறிக்கொண்டு இவ்வாறான குரோதத் தன்மையை இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

thumb_large_vijayakala-maheswaran

SHARE