இந்த செய்தி வரவே கூடாது என்பது கோடான கோடி மக்களின் வேண்டுதலாக இருந்தது, ஆனால் அந்த நாள் வந்தது, எல்லோரையும் கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதவி என வருவோருக்கு இல்லை என்று கூறாமல் எப்போதும் கடவுளாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். உடல்நலக் குறைவால் பல வருடங்களாக வீட்டிலேயே இருந்த அவர் நேற்று டிசம்பர் 28, காலமானார்.
இப்போது அவரது உடல் தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, மாலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
விஜய்
நடிகர் விஜயகாந்த், விஜய்க்காகவே நடித்துகொடுத்த படம் செந்தூரப்பாண்டி, இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
அப்படிபட்ட ஒரு கலைஞன் இறந்துவிட்டார், நடிகர் விஜய் மிகவும் உடைந்துபோய் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் மிகவும் உடைந்துபோய் இருப்பது பார்க்கும் போதே தெரிகிறது. இந்த நிலையில் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் சிக்கி தவித்திருக்கிறார்.
அப்போது அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது