விஜய், அஜித்தை தொடர்ந்து சிம்பு!

182

நடிகர் சிம்புவுக்கு எந்த சூழ்நிலையிலும் கை கொடுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரின் பெரிய நம்பிக்கை அவர்கள் தான்.

சிம்பு அண்மையில் தான் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் தன்னுடைய நடித்து முடித்து கொடுத்தார். அவரின் அடுத்த படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இவர்கள் தான் அஜித்தின் வீரம் படத்தையும், விஜய்நடித்த பைரவா படத்தையும் தயாரித்தார்கள். தற்போது சிம்புவின் 34 வது படத்திலும் அந்த நிறுவனம் முக்கிய இடம் வகிக்கிறது.

மேலும் இதனையடுத்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் சிம்பு நடிக்க, அடுத்ததாக விண்ணைதாண்டி வருவாயா 2, கலைப்புலி தாணுவின் படம் என வரிசையாக கமிட்டாகியுள்ளார்.

SHARE