இளையதளபதி விஜய்க்கு உலகம்முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. விஜய் தன ரசிகர்களை பல நற்பணிகளை செய்யுமாறு அடிக்கடி வலியுறுத்துவார். நேற்று திடீரென்று கடலூர் மாவட்டத்தில் திருட்டு விசிடிகளை ஒழிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பேரணி நடத்தி மனு கொடுத்தனர்.
இதில் விஜய் படம் மட்டுமில்லை, மற்ற நடிகர்களின்(தொடரி, ஆண்டவன் கட்டளை படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது) படங்கள் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு, தவறை உடனே தட்டி கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதை அறிந்த தனுஷ் தனது டுவிட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார், அதே போல் விஷாலும் “இதே போல் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் திருட்டு விசிடி எதிராக குரல் எழுப்ப வேண்டும் , அப்படி நடந்தால் கண்டிப்பாக மாற்றம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.