நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் பிரபலம். இவர் படம் என்றாலே விநியோகஸ்தர்கள் கண் மூடிக்கொண்டு படத்தை வாங்கிவிடுவார்கள்.
அண்மையில் அவரது நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, படமும் பட்ஜெட்டை தாண்டி நல்ல வசூல் வேட்டை நடத்தியிருந்தது. தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.
AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.
சூப்பர் தகவல்
நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு சந்தோஷமான செய்தி இப்போது வந்துள்ளது. அதாவது இயக்குனர் அட்லீ ஒரு மேடையில், விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
அதைக்கேட்டு ரசிகர்கள் சூப்பர், விரைவில் அந்த நல்ல செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.