விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

353

 

 

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைதடியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தனது சிறியதாயின் வீட்டில் இந்தச் சீருடைகளை பதுக்கி வைத்திருந்தார் என்றும், அவர் அந்த சீருடைகளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவந்து அதை வேறு சில நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தக் குற்றச்சாட்டில் கைதடியைச் சேர்ந்த மற்றொருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு சீருடை, 3 தொப்பிகள், 2 ஜக்கெட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் சீருடையுடன் புகைப்படம் எடுத்து வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பும் முகவர் வேலையைச் செய்து வரும் தொழிலை இவர்களில் ஒருவர் செய்துவருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. வள்ளிபுனம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

SHARE