இந்தியாவில் விடுதலைப் புலிகளுடன் இணைந்தவர் என்ற சந்தேகத்தில் கைதான சுதன் சுப்பையா நாடுகடத்தப்படவுள்ளார்.
சிறிலங்காவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த நாடுகடத்தல் இடம்பெறவுள்ளது.
கடந்த மாதம் பூனே விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனி செல்ல முற்பட்ட வேளையில் அவர் கைதானார்.
அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 2005ம் ஆண்டுக் காலப்பகுதியில் செயற்பட்டவர் என்று கூறப்படுவதுடன் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது….