யாழ் நெடுந்தீவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தபின் கொலை செய்த ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் கிருபாவிற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுந்தீவுப் பகுதியில் கடந்த வருடம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே மேற்படி கிருபா என்பவர் எனவும், இவர் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரின் அவர்களின் மெய்பாதுகாவலர் எனத் தெரிய வருகிறது.
இவர் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது மேல்நீதிமன்றில் பாரப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் (01.12.2015) குறித்த நீதிமன்றில் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா தொடர்பான சந்தேகநபர்களுடன் வரும்போது
ஊடகவியலாளரை மிரட்டியது யாவரும் அறிந்ததே.
அங்கிருந்த ஊடகவியாளர்களை தூஷண வார்த்தைகளால் மிரட்டியதுடன், நிருபரை நோக்கி நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்தவர் என்பதும், அப்போது அங்கிருந்த ஊடகவியாளர்களில் ஒருவர் “இந்த சேட்டையை புங்குடுதீவில் வையும்” என்ற போது, இதன்போது அங்கிருந்த வித்தியா கொலை சந்தேகநபர்களில் ஒருவர் “அவர் புங்குடுதீவு இல்லை நெடுந்தீவென” தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது.