கண்டிபிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஓஷத பந்துல பண்டார அலஹகோன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்கான காரணம்
வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று(21) அதிகாலை இரண்டு மணியளவில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.