விபத்து – ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி – பலர் காயம்

14

 

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (26.04.2024) காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து (Colombo) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

விசாரணை

இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளதுடன் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தடுக்கும் நோக்குடன் சாரதி பார ஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.

இதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE