விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி! வடமாகாண சபையில் 92 வீதமான நிதி செலவிடப்பட்டது! வடக்கு முதல்வர்

352

 

வடமாகாண சபைக்காக இவ்வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 92 வீதமான நிதி இன்று வரையில் செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

2a9b28845969757dadd9681d72058cf

பெருமளவு நிதி செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.

புதிய வருடத்துக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் இரு வாரங்களுக்கு முன்னர் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்த நிலையில், 2015ம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 92வீதமளவில் இன்று வரையில் செலவிடப்பட்டிருப்பதாகவும், சுமார் 750 செயற்திட்டங்கள் இந்த வருடத்தில் மாகாண சபையினால் செயற்படுத்தப்பட்டதாகவும் வடமாகாண சபை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

வடமாகாண சபைக்கான ஒதுக்கீட்டில் பெரும் தொகை செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் 738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 83 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டிள்ளார்.

அதிகாரிகள் கவனயீனம் மற்றும் நிதி ஆணைக்குழு அனுமதியை உரிய காலத்திற்குள் வழங்காமை போன்ற காரணங்களினால் 2015ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு  செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தி முடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மாகாண கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டம் அங்கீகரிப்பிற்கான விசேட அமர்வு நேற்று பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது 28.12.2015 ம் திகதி வரையில் மாகாணசபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கா ன நிதி ஒதுக்கீட்டின் செலவீட்டு தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 2015ம் ஆண்டு குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் அமைச்சுக்கள் ரீதியாக செலவீடுகளை பார்க்கும் போது, விவசாய அமைச்சு 238 வேலைத்திட்டங்கள் ஊடாக 98வீதமான நிதியை செலவு செய்திருக்கின்றது.

கல்வி அமைச்சு 217 வேலைத்திட்டங்கள் ஊடாக 73 வீ தமான நிதியை செலவு செய்திருக்கின்றது.

சுகாதார அமைச்சு 107 வேலைத்திட்டங்கள் ஊடாக 78 வீதமான நிதியை செலவிட்டுள்ளது. மீன்பிடி அமைச்சு 145 வேலைத்திட்டங்கள் ஊடாக 98வீதமான நிதியை செலவிட்டிருக்கின்றது.

முதலமைச்சர் அமைச்சு 131 வேலைத்திட்டங்கள் ஊடாக 80 வீதமான நிதியை செலவீடு செய்திருக்கின்றது.

எனவே மொத்தமாக 738 செயற்றிட்டங்களுக்காக குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி 1440 மில்லியன் ரூபாயில் கட்டுநிதி விடுவிப்பு 1250.37 மில்லியன் ரூபாய் இதில் செலவு செய்யப்பட்டுள்ள நிதி 1190.92 மில்லியன்களாகும்.

எனவே மொத்த செலவீடு 83வீதமாகும் என முதலமைச்சர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மாகாணசபை வருட இறுதி ஒன்று கூடலில் பேசும்போது இந்த அடிப்படையில் அடுத்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதி உரிய காலத்திற்குள் செயற்றிட்டங்கள் தொடங்கப்பட்டு செலவு செய்யப்படும்.

எனவும் இந்த வருடம் அதிகாரிகளின் அசமந்தம் மற்றும் நிதி ஆணைக்குழு வின் அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு தாமதமாகியமை போன்றவற்றினால் இறுதி தறுவாயில் மிகுந்த சிக்கலுக்கு மத்தியில் ஒதுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு செலவு செய்யப்படாமல் வேறு செயற்றிட்டங்களுக்கு நிதி செலவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் கூறியுள்ளார்

SHARE