பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் ஒருவரான சரத் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்க அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவுக்கு வருகை தந்த வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.