விமானத்தள விஸ்தரிப்புக்காக ஜப்பானிய வங்கி நிதியுதவி!

284
இலங்கையின் கட்டுநாயக்க விமானத்தள விஸ்தரிப்புக்காக ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி( ஜெய்கா) இலங்கையுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது.
JICA-logo-300x243

இதன்படி 56 பில்லியன் ரூபாய்களை அந்த வங்கி வழங்கவுள்ளது.

புதிய விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க விமானத்தளத்தில், பயணிகளுக்கான புதிய இடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதன்கீழ் வருடம் ஒன்றுக்கு 15 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையத்தின் ஊடாக கையாளக்கூடியதாக இருக்கும்.

தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக 8.5 மில்லியன் பயணிகளே வந்து செல்கின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் 23 விமான தரிப்பிடங்களும் அமைக்கப்படவுள்ளன.

96 மேலதிக பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன

2020ஆம் ஆண்டில் இந்த பணிகள் முழுமை பெறவுள்ளன.

SHARE