விவசாயிகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்பாக உரம் பெற்றுக்கொள்வதற்காக நிதி வழங்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து வங்கிகளுக்கும் இன்றைய தினம் நிதி அனுப்பி வைக்கப்படுமென விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் சுனில் வீரசிங்க தெரிவித்துள்ளார்..
அத்துடன் காணி உரிமையாளர்களின் அடையாள அட்டைகளின் தகவல் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் 80 வீதத்தினால் பூர்த்தி அடைந்துள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தகவல்களும் வங்கிகளுக்கு பெற்று கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உரமானியத்திற்கு பதிலாக உரம் வழங்குவதற்கு பதிலாக உரத்திற்கான பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.