விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம்: சஜித்

43

 

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எனது பொருளாதார கொள்கை வகுப்பாக்கக் குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதாரக் குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம் என நாகரிகமாக அழைக்கும்போது, கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 154ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மொனராகலை பாடசாலை ஒன்றில் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரக் கொள்கை
மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் சந்திக்கும்போது தனிப்பட்ட சந்திப்புகள் கூட நடைபெறுகின்றன.

மொழித்திறன் இல்லை என்றால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறான திறமை இல்லாதவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை வழங்குவது மீண்டும் பாதாளத்தில் விழுவதைப் போன்றதாகும்.

விவாதம் நடத்த நான் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றேன். இவ்வாறான விவாதங்களில் இருந்து தப்பியோட வேண்டாம்.

பொருளாதார நெருக்கடி (Economic Crisis) தொடர்பில் எனது பொருளாதார கொள்கை வகுப்பாக்க குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதாரக் குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம்.

விவாதங்களுக்கு அழைக்கும் போது கோழைகள் போன்று தப்பியோட வேண்டாம் என புரட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE