வீடமைப்பு திட்டங்களில் விமல் வீரவன்சவின் உறவினர்களுக்குச் சலுகை! அரசாங்கத்துக்கு 600 லட்சம் இழப்பு

289

விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களில் அவரது உறவினர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகை காரணமாக அரசாங்கத்துக்கு 600 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச,

மத்தேகொட மற்றும் கஹதுடுவை பிரதேசங்களில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு மாடி வீட்டுத் திட்டங்களில் ஐந்து வீடுகள் விமல் வீரவன்சவின் உறவினர்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் சுமார் 500 லட்சம் வரை அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணியாற்றிய ஒருவருக்கும் இவ்வாறு வீடொன்று வழங்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட வீடுகளை ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்கள் அரசாங்கத்திடம் மீண்டும் கையளித்துவிட்டனர். எனினும் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணியாற்றியவர் தொடர்ந்தும் குறித்த வீட்டில் வசித்து வருகின்றார்.

இவ்வாறான முறைகேடுகள் காரணமாக இந்த வீடமைப்புத் திட்டத்தில் மட்டும் சுமார் 600 லட்சம் ரூபா இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE