ஹற்றன், பூண்டுலோயாவின் துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரசபேருந்து ஒன்று இயந்திரக்கோலாறு காரணமாக பாதையைவிட்டு விழகி வீடு ஒன்றின் மீதுமோதியதால் பேருந்தும் வீடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) காலை வேலையில் அரசபேருந்து அதன் சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹற்றன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேருந்து இரவு வேளையில் துனுக்கேதெனிய பிரதேசத்திலேயே நிறுத்திவைக்கப்படும். மீண்டும் காலை வேளையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹற்றனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது.
இந்த நிலையிலேயே இன்று சேவையை ஆரபிக்கும் போது இயந்திரக்கோலாறு காரணமாக அருகிலிருந்த வீட்டின்மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.