வீட்டிலேயே பால் சர்பத் செய்வது எப்படி

260
வெயிலுக்கு குளுகுளு பால் சர்பத்

தேவையான பொருட்கள்

பால் – 1/2 லிட்டர்,
நன்னாரி சர்பத் – 100 மிலி,
சப்ஜா விதை – 1 டேபிள் ஸ்பூன்,

பாதாம் பிசின் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசினை தண்ணீரில் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் குளுமையான பொருள் என்பதால், வெயில் காலத்தில் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னை ஏற்படாது.

பாலை காய்ச்சி நன்கு குளிர வைக்கவேண்டும்.

குளிர வைத்த பாலில் நன்னாரி சர்பத், சப்ஜா விதை மற்றும் பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலக்கவும்.

கலந்த ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

குளுகுளு பால் சர்பத் ரெடி.

சப்ஜா மற்றும் பாதாம் பிசினை மட்டும் தனியாக ஊறவைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது பாலில் கலந்து குடிக்கலாம்.

SHARE