வீட்டில் விரைவில் பணம் சேர செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்

152

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், வீடு முழுவதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து செல்வம் பொங்கி வழியும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் நம் வீட்டில் உள்ள அறையில் சில பொருட்களை வைத்து பரிகாரம் செய்வதின் மூலம் எப்படி அதிக பணம் சேரும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

கொத்தமல்லி

வீட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து மூலையிலும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தேவயான அளவு நீர் விட்டு அதில் சில கொத்தமல்லி இலைகளை போட்டு வைக்கவும். இப்படி தினமும் ஒவ்வொரு நாளும் புதிதாக செய்து வந்தால் வீட்டில் பணம் பெருகுமாம்.

கற்றாழை செடி

அனைவரது வீட்டிலும் காணப்படும் செடிகளில் ஒன்று கற்றாழை செடி. இந்த செடியை வீட்டின் முன்புறம் வைக்காமால் பின்பக்கத்தில் வைத்து வளர்த்து வர நிதி நிலைமை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

சோளம்

வீட்டினுள் தென்கிழக்கு மூலையில் அரை கிலோ சோளம் எடுத்து அதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். மாற்றுகையில் சோளத்தை பறவைகளுக்கு இட்டு விடலாம்.

சிகப்பு குங்குமம்

பௌர்ணமியில் ஆரம்பிக்கும் போது தினமும் வெளியே செல்லும் போது சிகப்பு குங்குமம் கொண்டு இடது கையில் ஒரு குச்சியால் ரூ அல்லது Rs எழுதி இவ்வாறு தொடர்ந்து பதினைந்து நாட்கள் அதாவது அமாவாசை வரை செய்து வாந்தால் நல்ல பலன் கிடைக்கும்

அரிசி

வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு அரிசியில் புதையுமாறு செய்யவும்.

மேலும் இதனை ஆறு மதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். மேலும் அதில் உள்ள நாணயங்களை எடுத்து கொண்டு அரிசியை காகைக்கு போடுவது மிகவும் நல்லது.

SHARE