அழகாக மாற வேண்டும் என்பதற்காக செயற்கை ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தாமல் மிக எளிய முறையில் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே சூப்பராக ஜொலிக்கலாம்.* சர்க்கரையை தேன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவினால் சருமம் பொலிவடையும்.
* முட்டையின் வெள்ளை கருவில் ஆலிவ் ஆயில் சேர்த்து மசாஜ் செய்தால் பளிச்சென்று மாறும். * தினமும் இரவில் ஆலிவ் ஆயிலுடன் ரோஸ் வாட்டர் கலந்து மசாஜ் செய்து வந்தால் பொலிவாக இருக்கும். * தக்காளியை கொண்டு மசாஜ் செய்யும் போது அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை முற்றிலுமாக நீங்கிவிடும். * பாலுடன் ஓட்ஸை சேர்த்து முகத்தில் மசாஜ் செய்துவர நல்ல பலன் கிடைக்கும். * வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதி யாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கரு வளையங்களும் நீங்கிவிடும். * வாரத்திற்கு இருமுறையேனும் ஆவி பிடித்து வந்தால் முகம் பொலிவாக இருக்கும். * சத்துக்கள் நிறைந்த பழங்களான மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றை கொண்டு மாஸ்க் போட்டால் முகத்தில் உள்ள அழுக்குகள், கருமை நீங்கிவிடும். * தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத் து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். * எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும். * தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். |