வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா: ஆதங்கத்தில் கோஹ்லி

313
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியி சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில், பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் சிறப்பான நிலையை இந்தியா வெளிப்படுத்தியது.

ஆனால், அடுத்த நான்கு நாட்கள் பெய்த தொடர் மழையால் இந்தியாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோஹ்லி கூறியதாவது, ஒவ்வொரு நாளும் மைதானத்திற்கு வந்து போட்டியில் பங்கேற்க இயலாதது எரிச்சலை ஏற்படுத்தும், இருப்பினும் வானிலைய கட்டுப்படுத்த இயலாது.

டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவை முதல் நாள் ஆட்டத்திலேயே சுருட்டினோம், மேலும் நான்காவது நாள் ஆட்டத்தில் நாங்கள் துடுப்பெடுத்தாடியிருந்தால் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க இயலும்.

ஆனால் மழை வந்து குறுக்கிட்டதால், வெற்றி வாய்ப்பு நழுவிவிட்டது என்றே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE