வெற்று வரவு- செலவுத்திட்டம்! – பொருளாதார நிபுணர் கலாநிதி மு.சர்வானாந்தன்

297

தேசிய அரசால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்திய பிரபல பொருளாதார நிபுணரும், அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதம ஆய்வாளருமான கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானாந்தன்,

நீண்டகாலப் பொருளாதார இலக்குகளைக் கொண்டிராத இந்த வரவு – செலவுத் திட்டம் ஒரு வெற்று வரவு – செலவுத்திட்டம் என்று குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்திய  கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானாந்தன், நீண்ட காலப் பொருளாதார இலக்குகளைக் கொண்டிராத இது ஒரு வெற்று வரவுசெலவுத் திட்டம் எனக்குறிப்பிட்டார்.

இந்த வரவு – செலவுத்திட்டம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேசிய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டம் எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தருவதாகவுள்ளது.

போர் நிறுத்த காலத்தில் இருந்த ரணில் அரசால் சமர்ப்பிக்கப்பட்டதற்கும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது.

2001ஆம் ஆண்டில் நாட்டில் எதிர்மறை பொருளாதார வளர்ச்சி காணப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.

அப்போது தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையில் ரணில் அரசு ‘இலங்கையை மீள நிலைநிறுத்தல்’ என்ற தலைப்பிலான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தது.

ஆனால், அது பல காரணங்களினால் வெற்றி பெறவில்லை. ஆனால், அது பல காரணங்களினால் வெற்றிபெறவில்லை.

கடந்த 5ஆம் திகதி பிரதமர் ஆற்றிய பொருளாதாரம் குறித்த உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த சாரம்சத்தையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத்திட்டத்தையும் நோக்குகின்றபோது திட்டவட்டமான பொருளாதார இலக்குகள் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் எப்படி பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டம் போன்றே,

அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காக வைத்து இந்த வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து வருட காலத்தில் பத்து இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால், எந்தத்துறையில் எவ்வித பொருளாதார இலக்குகளை சார்ந்ததாக அது உருவாக்கப்படும் போன்ற தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்றார்.

SHARE