வெலிகந்தேவ வனப்பகுதியில் ஐவர்  கைது

256

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்தேவ வனப்பகுதியில்   புதையல் அகழ்விற்கான தேடுதல் நடவடிக்கைகளில்  ஈடுபட்ட ஐவர்  கைது  செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 63 வயதுக்கிடைப்பட்ட நொச்சியாகம, சாலிய, அசோகபுர மற்றும் கிரிபாவ பகுதிளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்களை கல்கமுவ நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை  பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE