வெலிகமயில் கடலில் மூழ்கி ஒருவர் பலி!

265

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலுக்கு குளிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 வயதான சுனில் பிரேமதிலக என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இவரது மரணபரிசோதனை இன்று இடம்பெறும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

SHARE