வெலிசர கடற்படை முகாமை தீவிரமாக சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர்

234
வெலிசர கடற்படை முகாமை தீவிரமாக சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர் வெலிசர கடற்படை முகாமை, புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக சோதனையிட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வெலிசர கடற்படை முகாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றின் உத்தரவிற்கு அமையவே இந்த கடற்படை முகாம் சோதனையிடப்பட்டுள்ளது.

நேற்று காலை, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடற்படை முகாமின் வாகனங்கள் மற்றும் பாகங்களாக காணப்படும் வாகனங்கள் தொடர்பிலும் சோதனையிட்டுள்ளனர்.

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் ஓர் கட்டமாக இவ்வாறு முகாம் சோதனையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே திருகோணமலை கடற்படை முகாமில் பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்த வாகனங்களை கடற்படையினர் ஏற்கனவே மீட்டிருந்தனர்.

குறித்த வாகனத்தின் என்ஜின் மற்றும் செசி இலக்கங்கள் மாற்றப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

எனினும், நேற்று மாலை வரையில் வெலிசர முகாமில் குறித்த வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேவேளை, இந்த சுயாதீனமான முறையில் விசாரணைகள் நடத்தப்படுவதனால் இது குறித்து கருத்து வெளியிட முடியாது என கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Shall Find
Shall Find
SHARE