வெலே சுதாவின் மனு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

834

download-1

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதா என்ற சமந்த குமாரவை விடுதலை செய்ய கோரி அவரது சட்டத்தரணி முன்வைத்திருந்த பிணை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவிற்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் பல குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால்,வெலே சுதா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும்,வெலே சுதாவை விடுதலை செய்ய கோரியும் அவரது சட்டத்தரணி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் இந்த வழக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, ஒத்திவைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வெலே சுதாவின் மனைவி மற்றும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

இதேவேளை,மற்றுமொரு வழக்கு தொடர்பில் வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE