வெளிநாடுகளில் தங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு!

114

 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 04 நாட்களுக்கு நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டிற்கு பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

யூதர்களுக்கு எதிராக செயல்பட்ட ஹிட்லரின் நாசிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஹாமாஸ் தலைவர்கள் பலர் கட்டார், லெபனான் போன்ற நாடுகளில்இருந்தபடி இயங்கிவரும் நிலையில், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸை முழுமையாக அழிக்கும்வரை போர் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE