வெளிநாடு செல்ல யோசிதவுக்கு நீதிமன்றம் அனுமதி

270

yoshitha-rajapaksa

மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரிய யோசித, தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி காரணமாக யோசிதவின் கடவுச்சீட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE