வெளிநாட்டவரை திருமணம் செய்ய இருந்த யுவதி ஒருவரை முச்சக்கர வண்டியில் சென்றவர்களால் கடத்தி சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் யுவதியின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிவருவதாவது,
மூளாயை சேர்ந்த குறித்த யுவதிக்கும் கனடாவை சேர்ந்த ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை பதிவுத்திருமணம் நடைபெற இருந்தது. அதனை அடுத்து சனிக்கிழமை யுவதியும் உறவுக்கார பெண் ஒருவருமாக யாழ்.நகருக்கு பொருட்கள் வாங்கும் நோக்குடன் பேருந்தில் சென்றுள்ளனர்.
மூளாய் வீதியூடாக பேருந்து சென்று சுழிபுர சந்தியை அண்மிக்கும் போது பேருந்து சாரதி வீதி ஓரமாக பேருந்தை நிறுத்தி சில நிமிடங்கள் தொலை பேசியில் உரையாடியுள்ளார்.
அவ்வேளை முச்சக்கர வண்டி ஒன்றின் பின்னால் இருந்து வந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறி பெண்ணின் கையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றுள்ளார்.
அதனை பேருந்து சாரதி நடத்துனர் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
அச் சம்பவம் குறித்து யுவதியின் பெற்றோரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.