வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இளைஞர் வீடு போய் சேர முன்னர் விபத்தில் பலி

127

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக தாயகம் திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சற்று முன்னர் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவூதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக காத்தான்குடி ஊடாக அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் தம்புள்ளை அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்த நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் புறப்படத்தயாராகி சாரதி வண்டியை பின்னோக்கிச் செலுத்தியுள்ளார்.

இதன்போது அவசரமாக வண்டியில் ஏற முற்பட்ட குறித்த இளைஞர் வண்டிக்கும் அங்கிருந்த மரம் ஒன்றுக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சவூதியில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் வீடு சேரமுன்னர் உயிரிழந்த சம்பவம் பேருந்தில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE