மாத்தளை – தம்புள்ளை பிரதான வீதியில், வல்லிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு ஜோடியும், அவர்களுடன் இருந்த நபர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளிநாட்டவர்கள் பயணித்துள்ள முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.