ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படமான படையப்பா படம் பற்றி பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நீலாம்பரி கதாபாத்திரத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை மனசில் வெச்சுதான் எழுதினேன் என கூறி இருந்தார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளியில நடமாட முடியாது..
இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
“இதை அம்மா உயிரோட இருக்கும்போது சொல்லியிருக்கணும், இப்போ வந்து சொல்வது கோழைத்தனம். அவர் இருக்கும் பொது சொல்லி இருந்தால் வெளியில நடமாடி இயக்க முடியுமா” என ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.