2009 இறுதியுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருக்கும் போது கூட்டமைப்பினர்
தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்
முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா
மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவநாதன் கிசோர்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிவநாதன் கிசோர் கூட்டமைப்பினர் இந்தியா
செல்லும் விடயம் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர்
புலித்தேவனுக்கு தெரியவந்து தொலைபேசியில் கதைக்க முற்பட்ட போது
கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை என தெரிவித்த சிவநாதன் கிசோர்
புலிகளின் கதை முடியப்போகிறது என்பதால் கூட்டமைப்பினர் தங்கள் தோலைபேசிகளை
அணைத்து வைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவநாதன் கிசோர் எனது தொலைபேசியில்
தொடர்பினை மேற்கொண்ட விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின்
பணிப்பாளர் புலித்தேவன் கூட்டமைப்பினருடன் தொடர்பினை மேற்கொள்ள
முடியவில்லையென தெரிவித்ததுடன் கூட்டமைப்பினரை இந்தியா செல்ல வேண்டாமென
கூறும்படி புலித்தேவன் கோரியதாகவும் இந்தியா கூட்டமைப்பினரை மௌனமாக்கி
போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாகவும் புலித்தேவன் கூறியதாக
தெரிவித்தார். அத்துடன் கூட்டமைப்பினரை தான் தடுக்க முயற்சி செய்தநிலையில்
அன்றிரவே கூட்டமைப்பினர் இந்தியா சென்று விட்டதாக சிவநாதன் கிசோர்
தெரிவித்தார்