வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு வழங்கும் நடிகர் மோகன்

288

மயிலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு உணவு வழங்கினார் நடிகர் மோகன். மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு தன்னார்வலர்களும் திரையுலகினரும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரேகா தனது மகளுடன் சென்று கோயம்பேடு மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளுக்கு உணவும் போர்வை மற்றும் உடைகளும் வழங்கினார்.

நடிகர் மோகன் இன்று காலை மயிலாப்பூருக்கு சென்று உணவுடன் பிஸ்கட் மற்றும் உடைகளையும் வழங்கினார்.

இந்தப் பொருட்களை மயிலாப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு தானே நேரில் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார் மோகன்.

SHARE