வெள்ளநீரில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி

271

வத்தளை – அவரகொட்டுவ பிரதேசத்தில் வெள்ளநீரில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வெள்ளநீர் காணப்பட்ட வேளை ரெஜிபோம் பெட்டி ஒன்றில் ஏறி சிறுவர்கள் விளையாட முயன்ற போதே நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்களின் சடலம் தற்சமயம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE