வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

164

 

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சீன நாட்டு பெண் ஒருவரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் திகதி இரவு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

மோட்டார் வாகனத்தில் வந்த 4 பேருடனான குழுவொன்று இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த மோட்டார் வாகனம் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வாடகைக்கு பெற்று கொள்ளப்பட்டதென தெரியவந்துள்ளது.

பணத்தை பறிகொடுத்த சீனப் பெண் வட்டித் தொழில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

இரவு நேர விடுதிகளுக்கு செல்லும் நபர்கள் மற்றும் பொலிஸாருக்கு வட்டிக்கு பணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சீன நாட்டு பெண் 10 வருடத்திற்கும் அதிக காலம் இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE