மோட்டார் சைக்கிள் பாதையோர மைல் கல்லுடன் மோதியதில் ஒருவா் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து ஆரயம்பதி – கிரான்குளம் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியோர மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளாகி்யுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபரை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
..