அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர்.

துப்பாக்கியை நமது தலையில் நாமே வைத்து இருப்பது போன்ற நிலைமையில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும், வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.