வௌண்டன் தோட்டத்தில் 58 வீடுகளுக்கு அமைச்சர் திகாம்பரம் அவர்களினால் அடிக்கல் நாட்டல்

224

கொத்மலை வௌண்டன் தோட்டத்தில் அனர்த்தத்தின் மத்தியில் வாழ்ந்துவந்த நீண்டகாலமாக வாழ்ந்துவந்த 58 குடும்பங்களுக்கு பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் கடந்த 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இடம்பெற்றது.

அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கமைய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபாய் 3 கோடி 77 இலட்சம் நிதியொதுக்கீட்டில் நீர்மாணிக்கப்படவுள்ள தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மாகாணசபை உறுப்பினர்களான சிங்பொண்ணையா, ஸ்ரீதரன் சரஸ்வதி சிவகுரு உதயகுமார் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி, அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed (2)

unnamed (5)

unnamed (4)

unnamed (3)

 

SHARE