வ/ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.குகதாசன் தலைமையில் 29.06.2015 அன்று நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், லிங்கநாதன், ஈ.ஜெயதிலக ஆகியோரும், பாடசாலை சமுகத்தினரும் கலந்துகொண்டனர்.
வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஸ்ரீஸ்கந்தராஜா தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.