இன்று காலை 08.15 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது. 14வயதுடைய ஜேசுதாஸ் மில்ரோய் பெர்னாண்டோ என்ற மாணவனே கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவன் பொகவந்தலாவை சென். மேரீஸ் மத்திய கல்லலூரியில் தரம் 9 இல் கல்வி கற்று வந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தாய் சகோதரியை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையிலேயே சிறுவன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சிறுவன் பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீட்டிற்கு நேற்று இரவு சென்று வந்ததாகவும் மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.