ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
நேற்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையை வெளிப்படையாகவே விமர்சித்து வந்த குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.