ஹம்பாந்தோட்டை மக்கள் ஆபத்தான நோய்களினால் அதிகளவில் பாதிப்பு?

355

 

ஹம்பாந்தோட்டை மக்கள் ஆபத்தான நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எயிட்ஸ், வீசிங், நியூமோனியா மற்றும் சிறுநீரக நோய்களினால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வீ. நோய்த் தொற்று குறித்து வருடாந்தம் 12000 பேர் பரிசோதனை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மட்டும் 45 சிறுநீரக நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விவசாயிகள் என தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையில் நியூமோனியா வீசிங் போன்றவற்றினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் மஹிபால ஹேரத், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பூரண சலுகைகள் வழங்கப்பட்டிருந்ததுடன் பல்வேறு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE