ஹரீனின் அமைச்சில் அமைச்சர் ராஜித்த மகன் புகுந்ததால் குழப்பம்.

288

அமைச்சர் ஒருவரின் மகன் ஒருவர், தமது அமைச்சில் பலவந்தமாக நுழைந்து குழப்பமான முறையில் செயல்பட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட தகவல் குறித்து நேற்று அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். தவறு இழைக்கப்பட்டிருக்குமேயானால் குறித்த நபருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக எந்த விடயமும் அமைச்சரவையில் பேசப்படவில்லை என நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவிர தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன், பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன, திருடனைப் பிடிப்பதாகக் கூறி தனது அலுவலகத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்திருந்தார் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE